யார் மனதையும் புண்படுத்தி யூடியூபில் பேச மாட்டேன்..." நீதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கொடுத்த 'சவுக்கு' சங்கர்

0 410

காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் யூடியூபில் அவதூறாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர், இனி யார் மனதையும் புண்படுத்தும் விதமாக யூடியூபில் பேச மாட்டேன் என நீதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கொடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜயராகவன் தெரிவித்தார்.

3 வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் 2 வழக்குகளுக்கு முகாந்திரம் இல்லை என கூறிய நீதிபதி, சி.எம்.டி.ஏ. அதிகாரி பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் வரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து ஆணை பிறப்பித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments